ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யாமலேயே கோடீஸ்வரர் ஆகலாம்.. எடெல்வைஸ் அறிமுகப்படுத்திய ரூ.100 சேமிப்புத் திட்டம்!
- yagasathriya24mana
- 4 hours ago
- 2 min read
எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட், நாட்டின் முதல் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (REIT) அடிப்படையிலான குறியீட்டு நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 'எடெல்வைஸ் நிஃப்டி REITs & ரியாலிட்டி இன்டெக்ஸ் ஃபண்ட்' எனப்படும் இந்த புதிய நிதித் திட்டம், தற்போது சந்தா செலுத்துவதற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

இந்திய முதலீட்டாளர்களுக்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது எப்போதுமே ஒரு முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இருப்பினும், பெரிய பட்ஜெட்டுகள் மற்றும் சொத்து தொடர்பான ஆவணப் பணிகள் போன்ற காரணிகளால் அனைவரும் இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்கின்றனர்.
இந்தச் சவாலை எளிதாக்கும் வகையில், எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் , நாட்டின் முதல் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (REIT) அடிப்படையிலான குறியீட்டு நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 'எடெல்வைஸ் நிஃப்டி REITs & ரியாலிட்டி இன்டெக்ஸ் ஃபண்ட்' எனப்படும் இந்த நிதித் திட்டத்தில் சந்தா செலுத்தத் தொடங்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம்.
வெறும் ரூ. 100 உடன் ரியல் எஸ்டேட் முதலீட்டு வாய்ப்பு
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை, இதை எளிதில் அணுக முடிவதே ஆகும். பொதுவாக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் முதலீடு தேவைப்படும் நிலையில், இந்த இன்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டாளர்களை வெறும் ரூ.100-இல் தொடங்க அனுமதிக்கிறது. அடுத்தடுத்த முதலீடுகளை ரூ.1-இன் மடங்குகளில் செய்யலாம்.
இது நிஃப்டி REITS & ரியாலிட்டி டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸை (TRI) நேரடியாகக் கண்காணிக்கும் ஒரு ஓப்பன்-எண்டட் பாசிவ் ஃபண்ட் ஆகும். ஃபண்ட் மேலாளர்களான பாரத் லஹோதி மற்றும் மான்சி கங்கோத்ரா ஆகியோர் இந்தத் திட்டத்தை நிர்வகிக்கின்றனர். கண்காணிப்புப் பிழைகளைத் தவிர, ஃபண்டின் செயல்திறன் முற்றிலும் அதன் அடிப்படைக் குறியீட்டைச் சார்ந்தே இருக்கும்.

எங்கெல்லாம் முதலீடு செய்றாங்க?
இந்த நிதியின் முதலீட்டுத் தொகுப்பில், அதன் குறியீட்டுப் பங்குகளில் 60 சதவீதம் பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளிலும் (REITs), மீதமுள்ள 40 சதவீதம் பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளிலும் அடங்கியுள்ளது. எதிர்காலத்தில், இந்தியச் சந்தையில் பட்டியலிடப்பட்ட REIT-களின் வீச்சு விரிவடையும்போது, REIT-களுக்கான ஒதுக்கீடு 100 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். REIT-கள் பெரிய, உயர்தர வணிகச் சொத்துக்களிலிருந்து வழக்கமான வருமானத்தை வழங்குகின்றன, அதேசமயம் ரியல் எஸ்டேட் பங்குகள் நீண்ட கால மூலதன மதிப்பு உயர்வின் நன்மையை அளிக்கின்றன.
CEO ராதிகா குப்தா கூறியது என்ன?
எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ராதிகா குப்தா கூறுகையில், "இந்திய முதலீட்டாளர்களுக்கு ரியல் எஸ்டேட் நீண்ட காலமாக ஒரு முக்கியமான முதலீட்டு வாய்ப்பாக இருந்து வருகிறது. ஆனால், அதிக மூலதனத் தேவைகள் மற்றும் எண்ணற்ற சிக்கல்கள் காரணமாக இதில் முதலீடு செய்வது கடினமாக இருந்தது.

REIT-கள், ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான கட்டமைப்பின் மூலம், சாதாரண முதலீட்டாளர்கள் தரமான, வருமானம் ஈட்டும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை அணுகுவதை எளிதாக்கியுள்ளன. இந்தியாவின் முதல் REIT அடிப்படையிலான இன்டெக்ஸ் ஃபண்ட் மூலம், இந்தத் துறையில் பல்வகை முதலீட்டை முதலீட்டாளர்களுக்கு நாங்கள் இன்னும் எளிதாக்குகிறோம். இது குறைந்த செலவிலான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு முதலீட்டு வாய்ப்பாகும். இந்த ஃபண்ட் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தி, முதலீட்டாளர்கள் மேலும் பல்வகைப்பட்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்க உதவும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்." எனக் கூறியுள்ளார்.






Comments